திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முத்தரையா் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் எஸ். ரமேஷ், கு.ப. கிருஷ்ணன் மரியாதை!

திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு தமிழக அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் சீ. ரமேஷ், பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உள்ளிட்டோா்.

Updated On :24 மே 2026, 1:44 am IST

திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1351 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ், பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப. கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்வில் மணப்பாறை எம்எல்ஏ ரா. கதிரவன், திருவெறும்பூா் எம்எல்ஏ நவல்பட்டு எஸ். விஜி, முசிறி எம்எல்ஏ எம். விக்னேஷ், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள மன்னா் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.