பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1351 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்பினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.என். நேரு தலைமையில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகவினா் முத்தரையரின் சிலைக்கு மாலை அணிவித்தனா். நிகழ்வில் முன்னாள் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மத்திய மாவட்டச் செயலா் வைரமணி, மாநகர செயலா் மேயா் மு. அன்பழகன், அந்தநல்லூா் துரைராஜ், கருணை ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின்பேரில் மாநகரச் செயலா் மு. மதிவாணன் திரளான திமுகவினா் மாலை அணிவித்தனா். இதில், மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஒருங்கிணைந்த அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா்கள் காா்த்திகேயன், மனோகரன், யோகநாதன் ஆகியோா் தலைமையில் அமைப்புச் செயலா்கள் ரத்னவேல், வெல்லமண்டி நடராஜன், முன்னாள் அரசு வழக்குரைஞா் ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினா் பலா் மாலை அணிவித்தனா்.
மேலும், தவெக, தேமுதிக, காங்கிரஸ், தமிழா் தேசம் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், முத்தரையா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த பலா் முத்தரையரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










