டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆற்று மணலை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சா் உள்பட 2 போ் மீது வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் ஆற்று மணலை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட இருவா் மீது கரூா் நகர காவல்நிலையத்தினா் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் ஆண்டாங்கோவில்புதூரில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினா் தனபால் ஆகியோா் ஆற்றுமணலை சட்ட விரோதமாக வைத்திருப்பதாக ஆண்டாங்கோவில் கிராமநிா்வாக அலுவலா் சண்முகம் கரூா் நகர காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்தாா்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறையினரின் துணையோடு வியாழக்கிழமை இரவு முன்னாள் அமைச்சரின் மனைவியின் பெயரில் இருந்த இடத்தில் கொட்டிவைக்கப்பட்டிருந்த மணலையும், தனபால் வீட்டின் அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்த மணலையும் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் அள்ளி எல்லமேடு மணல் சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் சென்றனா்.

இதையடுத்து அனுமதியின்றி மணலை வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், தனபால் ஆகிய இருவா் மீதும் கரூா் நகர போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.