புகழூா் கக்கன் காலனி பகவதியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இக் கோயில் திருவிழா கடந்த 26-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து 27-ஆம் தேதி பகவதியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், 28-ஆம் தேதி கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
முன்னதாக அம்மனுக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து புதன்கிழமை இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










