தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் திருக்கல்யாணம்

சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மே 2026, 2:27 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட பூரணை புஷ்கலா தேவியாா் உடனான சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக, சேவுகப்பெருமாள் பூரணை புஷ்கலை தேவியா் ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள், ஊஞ்சலாடும் நிகழ்வு, மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் மங்கலநாண் பூட்டப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, பெண் பக்தா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் சிங்கம்புணரி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இரவில் 5 தலை நாகம் வாகனத்தில் உற்சவா் நான்கு ரத வீதிகளில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை சமணா்களை கழுவேற்றும் களுவன் திருவிழாவும், வருகிற 31-ஆம் தேதி புரவி எடுப்பு விழாவும், ஜுன் 1-ஆம் தேதி தேரோட்டமும், 2-ஆம் தேதி பூப்பல்லக்கும் நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.