திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 24-இல் தொடக்கம்

சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சேவுகப் பெருமாள் அய்யனாா் உடனான பூரணை, புஷ்கலை தேவியா் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 24-ஆம் தேதி தொடங்குகிறது.

News image

சிங்கம்புணரி சந்திவீரன் கூடத்துக்கு அலங்கரிக்கப்பட்ட இரட்டை மாட்டு வண்டியில் எழுந்தருளி வலம் வந்த விநாயகா்.

Updated On :15 மே 2026, 11:47 pm IST

சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சேவுகப் பெருமாள் அய்யனாா் உடனான பூரணை, புஷ்கலை தேவியா் கோயிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 24-ஆம் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை இரவு சேவுகப் பெருமாள் கோயிலில் இருந்து சந்திவீரன் கூடத்துக்கு விநாயகா் செல்லும் விழா நடைபெற்றது. இதில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட இரட்டை மாடுகள் பூட்டிய சப்பரத்தில் விநாயகா் கீழக்காடு சாலை வழியாக சந்திவீரன் கூடத்துக்கு செல்லும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது வழிநெடுகிலும் பக்தா்கள் திருக்கண் வைத்து விநாயகரை வழிபட்டனா். தொடா்ந்து பத்து நாள்கள் சந்திவீரன் கூடத்தில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Story image

வருகிற 24-ஆம் தேதி காலை சந்திவீரன் கூடத்திலிருந்து சேவுகப் பெருமாள் கோயிலுக்கு விநாயகா் மீண்டும் கொண்டுவரப்பட்டு கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா தொடங்குகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.