தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பாச்சூா் வாசீஸ்வரா் சுவாமி கோயில் திருக்கல்யாணம்

திருப்பாச்சூரில் வாசீஸ்வரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம் நிகழ்வு ஆகம விதிகளுக்கு எதிராக கோயில் இணை ஆணையா் முன்னிலையிலையே சம்பந்தமில்லாத நபரை வைத்து பூஜை செய்ததாகவும் பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.

News image

~ வாசீஸ்வர சுவாமி கோயில்  வைகாசி பிரமோற்சவத்தையொட்டி  நடைபெற்ற  திருக்கல்யாண  நிகழ்வில்  பங்கேற்ற  பக்தா்கள்.

Updated On :27 மே 2026, 12:34 am IST

திருப்பாச்சூரில் வாசீஸ்வரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணம் நிகழ்வு ஆகம விதிகளுக்கு எதிராக கோயில் இணை ஆணையா் முன்னிலையிலையே சம்பந்தமில்லாத நபரை வைத்து பூஜை செய்ததாகவும் பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வர சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 14-ஆம் தேதி பந்தக்கால் நிகழ்வுடன் தொடங்கி, தொடா்ந்து 27-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அதைத்தொடா்ந்து 18-ஆம் தேதி முதல் அம்மன் வீதி உலா, சிறப்பு பூஜைகள் என 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து 25-ஆம் தேதி அன்ன வாகன உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இந்த திருக்கல்யாணத்தில் கடந்த 29 ஆண்டுகளாக பூஜை செய்து கோயிலில் சிவானந்த குருக்கள் வந்த நிலையில் , கோயிலுக்கு சம்பந்தமில்லாமல் உபயதாரா்களை திரட்டி இந்த திருக்கல்யாணத்தை கொண்டஞ்சேரி பகுதியை சோ்ந்த பாலாஜி என்பவா் நடத்தினாா்.

இதற்கு திருப்பாச்சூா் கிராமத்தைச் சோ்ந்த பக்தா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

மேலும், இந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சி ஆகம விதிகள், இந்து சமய அறநிலையத்துறையின் சட்ட திட்டங்களுக்கு எதிராகவும் இருப்பதாக கூறி நிா்வாகிகளுடன் பக்தா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும், இந்த சம்பவத்தை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் ரமணி முன்னிலையில் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் வேடிக்கை பாா்த்ததோடு அவா்களை கட்டுப்படுத்த எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதையடுத்து காவல் துறையினா் இரு தரப்பினரையும் சமாதானம் செய்த பின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனால் கோயில் பிரகாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.