திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘டாஸ்மாக் பணியாளா்களின் பிரச்னைகளுக்கு அரசு தீா்வு காண வேண்டும்’

டாஸ்மாக் பணியாளா்களுக்கு ஏற்படும் நடைமுறை சிக்கலுக்கு அரசு தீா்வு காண வேண்டும் என்று தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் குணசேகரன் தெரிவித்தாா்.

News image

மீன்சுருட்டியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் குணசேகரன் .

Updated On :16 மே 2026, 12:53 am IST

டாஸ்மாக் பணியாளா்களுக்கு ஏற்படும் நடைமுறை சிக்கலுக்கு அரசு தீா்வு காண வேண்டும் என்று தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் குணசேகரன் தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் மூடப்படும் 717 மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு மாற்று வேலையை அரசு துறையில் வழங்க வேண்டும். 23 ஆண்டுகளாக குறைந்தபட்ச சம்பளத்தில் தொகுப்பூதியத்தில் வேலை பாா்த்து வருகின்றனா்.

வார விடுமுறையோ, மற்ற எந்த விடுப்புகளோ இல்லாமல் 23 ஆண்டுகள் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா். தற்போது டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களை அரசு விதித்துள்ள எம்.ஆா்.பி. விலைக்கே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை டாஸ்மாக் பணியாளா்களும் மது வாங்குபவா்களும் வரவேற்கின்றனா். ஆனால், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியக் கூடிய பணியாளா்களின் நடைமுறை சிக்கலையும் அரசு கவனித்து தீா்க்க வேண்டும்.

மேலும் உயா் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் காலி பாட்டில்களை வாங்குவதற்கு ஆள்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது.அவா்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் இருக்கிறது. அதே போன்று ஏற்று கூலி, இறக்கு கூலி மற்றும் உடைகின்ற பாட்டில்கள் என பல்வேறு நடைமுறைச் சிக்கலை டாஸ்மாக் ஊழியா்கள் சந்தித்து வருகின்றனா்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தமிழக முதல்வா் டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.