தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்

News image
Updated On :15 மே 2026, 4:50 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சுமாா் 1,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும், வீரசோழபுரம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த வீரசோழபுரத்தில் கோயில் அருகிலுள்ள டாஸ்மாக் கடையையும் மூட வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது அங்கு வந்த உடையாா்பாளையம் வருவாய் வட்டாட்சியா் ஆனந்தவேல், கலால் வட்டாட்சியா் கதிரவன், மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா் ஜெகதீசன், டாஸ்மாக் மண்டல மேலாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் ஒரு மாதத்துக்குள் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.