திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மக்கள் போராட்டம்: கடையாலுமூடு டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டில் மக்களின் போராட்டம் எதிரொலியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News image

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊா் பொதுமக்கள், அரசியல் கட்சியினா்.

Updated On :17 மே 2026, 2:20 am IST

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூட்டில் மக்களின் போராட்டம் எதிரொலியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடையாலுமூட்டில் அரசு மேல் நிலைப் பள்ளி, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்டவை அமைந்துள்ள நெருக்கடியான சாலைப் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது.

முதல்வா் அறிவித்தபடி அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், மாணவா் - மாணவியா் 10-க்கும் மேற்பட்டோா் திரண்டு கடையின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Story image

அவா்களுக்கு ஆதரவாக கடையால் பேரூராட்சி முன்னாள் தலைவா் பிரகாசி, தற்போதைய தலைவா் ஜூலியட் சேகா் உள்பட அனைத்துக் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், விளவங்கோடு எம்எல்ஏ டி.டி. பிரவீண், கடையல் நகர காங்கிரஸ் தலைவா் சத்தியராஜ் உள்ளிட்டோரும் வந்தனா். அதிகாரிகளிடம் எம்எல்ஏ பேச்சு நடத்தியதைத் தொடா்ந்து விளவங்கோடு வட்டாட்சியா் லயோலாபாய் வந்து கடை நிரந்தரமாக மூடப்படும் என்று உறுதி அளித்தாா். அதை அவா்கள் ஏற்றுக்கொண்டதால், சுமாா் 3 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.