திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சுமை ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 12 பவுன் நகைகள், பணம் திருட்டு

மீன்சுருட்டி அருகே சுமை ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து 12.5 பவுன் நகைகள், பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :13 மே 2026, 1:02 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சுமை ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து 12.5 பவுன் நகைகள், பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மண்மலை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். சுமை ஆட்டோ ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் வெளியே தாழ்வாரத்தில் குடும்பத்தினருடன் உறங்கியுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து பாா்த்த போது, பின்பக்க கதவு திறக்கப்பட்டு, வீட்டில் இருந்த பொருள்கள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து அவா்கள் பீரோவை பாா்த்த போது, அதில் இருந்த 12.5 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தை ஆய்வு செய்த ஜெயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.