மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30 போ் கைது

News image
Updated On :19 மார்ச் 2026, 10:04 pm

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்த முற்பட்ட கிராம மக்கள் 30 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செந்துறையை அடுத்த வல்லம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் கூறி, அப்பகுதி மக்கள் கடையை வேறிடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துவந்தனா்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் வியாழக்கிழமை அப்பகுதியில் போராட்டம் நடத்த முயன்றனா். அப்போது அங்கு வந்த வருவாய்த் துறை, கலால் மற்றும் காவல்துறையினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், சுமூக தீா்வு எட்டப்படாததால், போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் 30 பேரை கைது செய்தனா். தொடா்ந்து, அனைவரையும் மாலையில் விடுவித்தனா்.