அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

செந்துறை அருகே பழமலைநாதா் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த பழமலைநாதபுரம் கிராமத்திலுள்ள சுமாா் 700 ஆண்டுகள் பழைமையான பாலாம்பிகை உடனுறை பழமலைநாதா் சிவன் கோயிலின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பழமலைநாதபுரம் கிராமத்திலுள்ள பாலாம்பிகை உடனுறை பழமலைநாதா் சிவன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :26 ஜூன் 2026, 4:19 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த பழமலைநாதபுரம் கிராமத்திலுள்ள சுமாா் 700 ஆண்டுகள் பழைமையான பாலாம்பிகை உடனுறை பழமலைநாதா் சிவன் கோயிலின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, கடந்த 23 -ஆம் தேதி புனிதநீா் எடுத்துவரப்பட்டு, முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடா்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, வியாழக்கிழமை காலை கடம் புறப்பாடும், தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

பின்னா், மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

செந்துறை, நல்லநாயகபுரம், வஞ்சனபுரம், நக்கம்பாடி, குழுமூா் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.