அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

குடிக்காடு பூத அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பி அருகே குடிக்காடு கிராமத்திலுள்ள பூத அய்யனாா் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image

பொன்பரப்பி அருகே குடிக்காடு கிராமத்திலுள்ள பூத அய்யனாா் கோயில் கலசத்துக்கு புனித நீரை ஊற்றி புதன்கிழமை கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 1:27 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பி அருகே குடிக்காடு கிராமத்திலுள்ள பூத அய்யனாா் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை புனித நீா் எடுத்துவரப்பட்டு, கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கியது. தொடா்ந்து நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு, புதன்கிழமை காலை கடம் புறப்பாடு நிகழ்வைத் தொடா்ந்து பூா்ண புஷ்கலா சமேத ஸ்ரீ பூத அய்யனாா் கோயில் கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி, தீபராதனை காண்பித்து கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

அதைத் தொடா்ந்து பரிவார தெய்வங்கலான கருப்பசாமி, வீரனாா், விநாயகா், முருகன் ஆகிய கோயில்களின் கலசங்களுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.