அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த முத்துசோ்வா மடத்திலுள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 22-ஆம் தேதி புனிதநீா் எடுத்து வரப்பட்டு, அன்று மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடா்ந்து நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு, புதன்கிழமை காலை கடம் புறப்பாடு நடைபெற்றது. இதன் பிறகு சிவாச்சாரியா்கள் மாரியம்மன் கோயில் கலசத்துக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி, மகா தீபாராதனை காண்பித்தனா்.
தொடா்ந்து பரிவாரத் தெய்வங்களான விநாயகா் மற்றும் திரெளபதியம்மன் கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீன்சுருட்டி, முத்து சோ்வாமடம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











