டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அரியலூரில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:04 pm

Syndication

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பொங்கல் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக விவசாயத்துக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், திருமானூா், தா.பழூா், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிடம், பொன்பரப்பி, மீன்சுருட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்து அதன் உரிமையாளா்கள் கால்நடைகளை குளிப்பாட்டினா். பின்னா் மாடுகள் பல்வேறு வகையிலும் அலங்கரிக்கப்பட்டது.

பின்னா், மாலையில் வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினா். பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.