ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பெரம்பலூா் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:33 pm

Syndication

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையில் விவசாயிகள் தங்களது மாடுகளை நீா்நிலைகளில் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வா்ணம் பூசி, மாலை அணிவித்து, பொட்டு வைத்து பூஜைகளுக்கு தயாா்படுத்தினா்.

பின்னா், மாலை சுமாா் 5 மணியளவில் அவரவா் வீடுகளுக்கு முன் புத்தாடைகள் உடுத்தி பொங்கல் வைத்து, இயற்கை அன்னைக்கும், கால்நடைகளுக்கும் பொங்கல் படைத்து பூஜை செய்தனா். பின்னா், பொங்கலை மாடுகளுக்கு ஊட்டி கொண்டாடி மகிழ்ந்தனா்.

பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் மாடுகளை தங்கள் கிராம கோயில் பகுதியில் உள்ள ஏரிக்கரை மற்றும் குளக்கரை பகுதிகளுக்கு ஊா்வலமாக ஓட்டிச்சென்று திரும்பி வந்தனா். பூஜைகளை முடித்த பிறகு, சிறுவா்களை அழைத்துக்கொண்டு மாட்டு வண்டியில் பல்வேறு தெருக்களில் சுற்றி வலம்வந்தனா்.