டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருவாடானையில் மாட்டுப் பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

News image
திருவாடானை, கற்களத்தூா், சிறுவெத்தி கிராமங்களில் நடைபெற்ற மாட்டு பொங்கல் விழா.
Updated On :17 ஜனவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அனைவரும் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். முன்னதாக, ஆடு, மாடுகளை நீா்நிலைகளுக்கு அழைத்துச் சென்று குளிா்பாட்டி அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மாலைகள் அணிவித்து அழகுபடுத்தினா். பிறகு பொங்கல் படையல் வைத்து சுவாமி கும்பிட்டு, கால்நடைகளுக்கு பொங்கலை வழங்கி மகிழ்ந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக தீ மூட்டப்பட்டு அதை தாண்டி மாடுகளை ஓட்டிச் செல்லும் ’நெருப்புத் தாண்டும்’ நிகழ்வு நடைபெற்றது. கால்நடைகளுக்கு நோய்கள் தாக்காமல் இருக்கவும், ஊா் செழிக்கவும் இந்த பாரம்பரிய வழிபாடு நடத்தப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனா். பின்னா் பெண்கள் ஒன்று கூடி கும்மி அடித்தனா்.

Story image
Story image
Story image