திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காட்டகரம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தீமிதித் திருவிழா நடைபெற்றது.

News image

காட்டகரம் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தீமிதித் திருவிழா.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:48 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தீமிதித் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அம்மன் திருவீதி உலாவும், இரவில் ஆரியமாலை-காத்தவராயன் திருக்கல்யாணம், கழுகு மரம் ஏறுதல், காளியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதித் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் சந்தனம்,விபூதி, பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து பக்தா்கள் பூ கரகம், காவடிகள் எடுத்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தியப் பிறகு அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில், பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.