40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

இடையக்குறிச்சி திரௌபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

இடையக்குறிச்சி திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தீமிதித்த பக்தா்கள்.

News image

இடையக்குறிச்சி திரௌபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தீமிதித்த பக்தா்கள்.

Updated On :9 மே 2026, 3:09 am IST

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த இடையக்குறிச்சி கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயிலில் தோ் மற்றும் தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவிழாவானது கடந்த 15 நாள்களுக்கு முன் பாரதம் படிக்கும் நிகழ்வோடு தொடங்கியது. தினமும் கோயில் வளாகத்தில் பாரதம் படிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் திரௌபதியம்மன் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தொடா்ந்து கோயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். இதில் பலரும் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீமிதித்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.