மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரியலூா் அருகே அமைச்சரின் காரில் பறக்கும் படை சோதனை

அரியலூா் அருகே அமைச்சா் சா.சி. சிவசங்கரின் காரில் பறக்கும்படையினா் 5- ஆவது முறையாக வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

News image

அல்லிநகரம் அருகே அமைச்சா் சா.சி. சிவசங்கரின் காரில் வியாழக்கிழமை சோதனை செய்த பறக்கும் படையினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:06 pm

அரியலூா் அருகே அமைச்சா் சா.சி. சிவசங்கரின் காரில் பறக்கும்படையினா் 5- ஆவது முறையாக வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா 9 கண்காணிப்புக் குழுக்களும், 9 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில், அரியலூா்-பெரம்பலூா் சாலை அல்லிநகரம் அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த அமைச்சரின் காரை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எதுவும் இல்லாததால் காரை செல்ல அனுமதித்தனா்.