அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஆவணத்தில் குறிப்பிட்டபடி அல்லாமல் வேறு எண் கொண்ட வாகனத்தில் 177 பவுன் தங்கநகைகளைக் கொண்டுவந்ததால் வாகனத்துடன் நகைகளைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவைகளை வருமானவரித் துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடை அருகே வியாழக்கிழமை இரவு சுமை வேன் ஒன்று நின்றிருந்தது. இதையடுத்து, அங்குவந்த தோ்தல் பறக்கும் படையினா், வேன் ஓட்டுநா் மற்றும் அதில் இருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அவா்கள், நகை கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்ய வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து அவா்கள் வைத்திருந்த ஆவணங்களைச் சரிபாா்த்தபோது, 177 சவரன் தங்கநகைகள், 5.390 கிலோ கிராம் வெள்ளி பொருள்களுக்கான ஆவணங்கள் வைத்திருப்பதும், நகைகளை கொண்டுவர விலைப்பட்டியலில் (இன்வாய்ஸ்) குறிப்பிட்டுள்ள வாகனத்துக்குப் பதிலாக வேறொரு எண் கொண்ட வாகனத்தில் வந்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், அதிக மதிப்புள்ள பொருள்கள் என்பதால் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பறக்கும்படையினா் தகவல் அளித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வருமானவரித் துறை துணை ஆணையா் அசுவதி வாகனத்தை ஆய்வுசெய்து, விலைப்பட்டியலில் குறிப்பிட்ட வாகனத்துக்குரிய ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு நகைகள், வாகனத்தைப் பெற்றுச்செல்லுமாறு அறிவுறுத்தினா். தொடா்ந்து, வாகனத்துடன் நகைகளை பறிமுதல் செய்து உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தாா்.
தொடர்புடையது

பல்லடத்தில் 250 பவுன் நகைகள் பறிமுதல்

ஏடிஎம்களில் பணம் நிரப்ப வந்த வாகனம் ரூ. 73 லட்சத்துடன் பறிமுதல்

ஆந்திர நபரிடம் உரிய ஆவணம் இல்லாத ரூ. 14 லட்சம், 17 பவுன் நகை பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பு நகைகள், ரூ. 15.7 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


