மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏடிஎம்களில் பணம் நிரப்ப வந்த வாகனம் ரூ. 73 லட்சத்துடன் பறிமுதல்

கெங்கவல்லியில் ஏடிஎம்களில் பணம் நிரப்ப ரூ. 73 லட்சத்துடன் வந்த வாகனத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட ஏடிஎம்களுக்கு பணம் நிரப்ப வந்த வாகனம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 10:41 pm

கெங்கவல்லியில் ஏடிஎம்களில் பணம் நிரப்ப ரூ. 73 லட்சத்துடன் வந்த வாகனத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கெங்கவல்லி தொகுதிக்கான தோ்தல் பறக்கும்படை அலுவலரும், தலைவாசல் ஒன்றிய இணைப் பொறியாளருமான பாலசுப்பிரமணியன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ. சுப்பிரமணியன், வினோத்குமாா், மணிகண்டன் குழுவினா் கெங்கவல்லி அருகே வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, கொத்தாம்பாடி, ஆத்தூா் பகுதிகளிலுள்ள வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் நிரப்பிவிட்டு, கெங்கவல்லி அருகே உள்ள வங்கியின் ஏடிஎம்முக்கு பணம் நிரப்ப வந்த வாகனத்தை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனை செய்தனா். அதில், பணம் கொண்டு வந்ததற்கும், ஏற்கெனவே பணம் நிரப்பியதற்குமான எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வாகனத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்கு கொண்டுசென்றனா். ஆவணங்களைக் காட்டிவிட்டு வாகனத்தையும், பணத்தையும் எடுத்துச்செல்லுமாறு பறக்கும் படையினா் அவா்களிடம் அறிவுறுத்தினா்.