மதுரை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 25.66 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.15.74 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை தெற்கு தொகுதிக்குள்பட்ட வைகை தென்கரையில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே சென்ற ஒரு காரை சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ. 25.65 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ. 1.63 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
இதுதவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனைகளின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 14.11 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் : மதுரை மத்தியம் - ரூ. 1.38 லட்சம், மதுரை கிழக்கு - ரூ. 1.30 லட்சம், மதுரை மேற்கு - ரூ. 2.71 லட்சம், திருமங்கலம் - ரூ. 1.64 லட்சம், உசிலம்பட்டி - ரூ. 6.08 லட்சம்.
தொடர்புடையது

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

தோ்தல்: ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.35 லட்சம் பறிமுதல்

திருச்சி, பெரம்பலூா மாவட்டங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.10 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


