திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல் தந்தை, மகன் உள்ளிட்ட 4 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 1:58 am IST

திருச்சி அருகே மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 65 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, கடை உரிமையாளா்களான தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆளவந்தான்நல்லூா் பகுதியில் பள்ளிக்கு அருகே உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸாா், ஆளவந்தான்நல்லூா் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள பி. ஜாஹீா் உசேன் (58), இவருடைய மகன் முகமது ரியாஸ் (24) ஆகியோருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கடையில் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 65 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜாகீா் உசேன், முகமது ரியாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

மாநகரில் இருவா் கைது:

திருச்சி உறையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மந்தை பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்துகொண்டிருந்த தென்னூா் மாளிகைபுரத்தைச் சோ்ந்த சி. அடைக்கலம் (43) , அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எஸ்ஐடி கல்லூரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்துகொண்டிருந்த காட்டூா் பகுதியைச் சோ்ந்த எம். ஆரோக்கியசாமி (56) ஆகிய இருவரையும் மாநகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலும், அவா்களிடமிருந்து 3 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், இருசக்கர வாகனம், ரூ.3,800 ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.