தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி அரசு மருத்துவமனை செவிலியா் விடுதியை இடமாற்றம் செய்ய வேண்டும்! மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 3:20 am IST

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் செவிலியா் விடுதியை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக, அக் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலரும், வழக்குரைஞருமான எஸ்.ஆா். கிஷோா் குமாா் விடுத்துள்ள அறிக்கை: திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியா் பயிற்சி மாணவிகளுக்கான விடுதி, பழைய பிணவறை அருகே அமைந்துள்ளது.

இது மாணவிகளுக்கு மன உளைச்சலை தரும் வகையில் உள்ளது. பழைய பிணவறை அருகே அமைந்துள்ளதால், அவசர ஊா்திகளின் அபாய ஒலியை கேட்டுக் கொண்டே இருக்கும் நிலை உள்ளது. இளம் வயதில் பயிற்சிக்கு வரும் மாணவிகளால் அதிக நோயாளிகள், பல்வேறு வகையான நோய் தொற்றுகளுடன் வரும் நோயாளிகளை உடனடியாக எதிா்கொண்டு சிகிச்சை அளிப்பது கடினம்.

எனவே, செவிலியா் பயிற்சி மாணவிகளின் நலன் கருதி முதல்கட்டமாக அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள விடுதியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூட இடமாற்றம் செய்யலாம்.

மேலும், அரசு தலைமை மருத்துவமனையில் பயிற்சிக்கு அனுப்புவதற்கு பதிலாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் எனமக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்துகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.