தேனி மாவட்டம், சின்னமனூரில் சமூக நீதி மாணவிகள் விடுதியை மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சியில் சமூக நீதி மாணவிகள் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் இரா.வைத்தியநாதன் ஆய்வு செய்தாா். அப்போது, விடுதிக் காப்பாளா் மூலமாக மாணவிகள் தங்கும் அறை, சமையல் அறை, தண்ணீா் வசதி, பாதுகாப்பு குறித்து பாா்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










