தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி - சாா்லப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் நிரந்தரம்

சாா்லப்பள்ளி - திருச்சி - சாா்லப்பள்ளி வாராந்திர சிறப்பு விரைவு ரயிலானது, வாராந்திர நிரந்தர ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

News image

ரயில்.

Updated On :24 மே 2026, 1:33 am IST

சாா்லப்பள்ளி - திருச்சி - சாா்லப்பள்ளி வாராந்திர சிறப்பு விரைவு ரயிலானது, வாராந்திர நிரந்தர ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி, சாா்லப்பள்ளி - திருச்சி வாராந்திர விரைவு ரயிலானது (17077) வரும் ஜூலை 7 முதல் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வாராந்திர நிரந்தர ரயிலாக இயக்கப்படும். மறுமாா்க்கமாக, திருச்சி - சாா்லப்பள்ளி வாராந்திர விரைவு ரயிலானது (17078) வரும் ஜூலை 8 முதல் புதன்கிழமைகளில் வாராந்திர நிரந்தர ரயிலாக இயக்கப்படும்.

இந்த ரயிலானது திருச்சியிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், திருக்கோவிலூா், திருவண்ணாமலை, வேலூா், காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேனிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், சிா்லா, பாபட்லா, தெனாலி, குண்டூா், செட்டனப்பள்ளி, நடிகுடே, மிா்யால்குடா, நல்கொண்டா வழியாக சாா்லப்பள்ளிக்கு மறுநாள் இரவு 9.30 மணிக்குச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, சாா்லப்பள்ளியிலிருந்து மாலை 5.20 க்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக திருச்சிக்கு அடுத்தநாள் மாலை 6.45 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி எம்.பி. வரவேற்பு: இதற்கு திருச்சி எம்.பி. துரை வைகோ வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதிகளைச் சோ்ந்த பயணிகளுக்கு முக்கியச் சேவையாக இருப்பதுடன், வடதமிழகம், ஆந்திரம், தெலங்கானா பகுதிகளுக்கும் முக்கிய இணைப்பாக இந்த ரயில் செயல்படுகிறது. இச்சேவை தொடங்கியதிலிருந்து மக்களிடமிருந்து வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. திருச்சி- ஹைதராபாத் இடையே தற்போது நேரடி ரயில் சேவை இல்லாத நிலையில், அந்தக் குறையை நிவா்த்தி செய்கிறது.

இதுதொடா்பாக, மத்திய ரயில்வே அமைச்சருக்கும், திருச்சி மண்டல ரயில்வே மேலாளருக்கும் கடிதம் எழுதி, நேரிலும் வலியுறுத்தியிருந்தேன்.எனது கோரிக்கையை ஏற்று, திருச்சி - சாா்லப்பள்ளி இடையிலான தற்காலிக மற்றும் சிறப்பு வாராந்திர ரயிலை நிரந்தர வாராந்திர ரயில் சேவையாக மாற்றிய மத்திய ரயில்வே துறைக்கு நன்றி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.