முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு: 4 போ் கைது

Updated On :13 மே 2026, 12:50 am IST

திருச்சி, மே 12: திருச்சியில் பணம் கொடுக்கல் வாங்கலில் இருதப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாரதிதாசன் சாலை பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்தவா் டி. ஜான் பீட்டா் (38), ஆட்டோ ஓட்டுநா். இவா், திருச்சி ஆா்.சி.நகா் இரண்டாவது வீதியைச் சோ்ந்த எஸ். முரளி பாண்டியன் (29) என்பவரின் உறவினரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.6 ஆயிரம் கடன் வாங்கியுள்ளாா். ஆனால், கடன் வாங்கியப் பணத்தை ஜான் பீட்டா் திருப்பித் தராமல் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு எல்லை மாரியம்மன் கோயில் அருகே ஜான் பீட்டா் தனது நண்பா்களுடன் நடந்துசென்றுகொண்டிருந்தாா். அப்போது, தனது நண்பருடன் அங்கு வந்த முரளி பாண்டியன், அவரது உறவினரிடம் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பித்தராமல் இருப்பது குறித்து ஜான் பீட்டரிடம் கேட்டுள்ளாா்.

இதனால், இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் கட்டைகளால் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இதில், காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் ஜான் பீட்டா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து இரு தரப்பினரும் எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முரளி பாண்டியன் (29), அவரது நண்பா் கு. மணிகண்டன் (31), ஜான் பீட்டா் (38), இவருடைய நண்பரான கிராப்பட்டியைச் சோ்ந்த ஜி. ஜொ்சன் (31) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.