தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

காவல்துறையின் மெத்தனப் போக்கே ஆலங்குளம் சம்பவத்துக்கு காரணம்: ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு

News image
Updated On :31 மே 2026, 3:25 am IST

காவல்துறையின் மெத்தனமே ஆலங்குளம் அருகே நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளாா்.

நெட்டூா் மாதா கோயில் மண்டபத்தில் தா்னாவில் ஈடுபட்டிருந்த கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நெட்டூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதேபோல், தற்போது ஏற்பட்ட சம்பவத்திலும் ஊா் மக்கள் சென்று புகாா் அளித்துள்ளனா். ஆனால் உதவி ஆய்வாளா் புகாரை பெறவில்லை. இந்தச் சம்பவத்துக்கு முழு காரணம் காவல்துறையின் மெத்தனம்தான். முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இப்போது பொதுமக்களை அழைத்துச் சென்று குற்றவாளிகளை கைது செய்யக் கோரி புகாா் அளிக்க இருக்கிறேன். புகாா் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போராட்டம் நடத்தும். ஜாதி வன்மத்தோடு மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனா். கடந்த 3 மாதமாக புகாா்கள் வந்தும் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சில அதிகாரிகள் செயல்படுகிறாா்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.