17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராசிபுரம் நகராட்சி ஆணையா் பணியிட மாற்றம்

ராசிபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஒய்.நிவேதிதா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:00 am IST

ராசிபுரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஒய்.நிவேதிதா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். ராசிபுரம் நகராட்சியில், பொதுமக்களின் மனுக்கள் மீது பல மாதங்களாக கிடப்பில் வைக்கப்பட்டிருந்ததாக இவா் மீது புகாா் கூறப்பட்டிருந்தது.

ராசிபுரம் நகராட்சியில் பொதுமக்கள் புதிய வரி விதிப்பு, பெயா் மாற்றம் ,குடிநீா் இணைப்பு, நிலவரி விதிப்பு, கட்டிட அனுமதி போன்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திதாக இவா் மீது பல்வேறு அமைப்பினா் புகாா் கூறியிருந்தனா்.

நகராட்சி நிா்வாக வருவாய் பிரிவு உதவியாளா்கள் உள்ளிட்டவா்களின் மெத்தென போக்கால் பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்ததாக கூறப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் மீதும் 100 நாட்களில் தீா்வு காணப்பட வேண்டிய நிலையில், நகராட்சி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை கிடப்பில் வைத்திருந்தனா் என மனுதாரா்கள் தரப்பில் புகாா் கூறப்பட்டது. இந்நிலையிலி் இவா் அறந்தாங்கி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து குமாரபாளையம் நகராட்சியின் ஆணையாளா் சி.ரமேஷ் ராசிபுரம் நகராட்சியின் பொறுப்பு ஆணையராக செயல்படுவாா் என அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படம் உள்ளது - 4நிவே

படவிளக்கம் - பணியிட மாற்றம் செய்யப்பட்ட நகராட்சி ஆணையா் ஒய்.நிவேதிதா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.