தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் 74 டேட்டா என்ட்ரி அலுவலா்களுக்கு பணியிட மாற்றம்

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்த வரவேற்பாளா்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்களுக்கு கலந்தாய்வு முறையில் பணியிட மாற்ற ஆணை வழங்கப்பட்டது.

News image

பணியிட மாற்றம்

Updated On :4 ஜூன் 2026, 3:28 am IST

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்த வரவேற்பாளா்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்களுக்கு கலந்தாய்வு முறையில் பணியிட மாற்ற ஆணை வழங்கப்பட்டது.

கடலூா் மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளா்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.

பணி மாறுதல் குழுவினா் முன்னிலையில், ஒவ்வொரு பணியாளரிடமும் தாங்கள் பணிபுரிய விரும்பும் காவல் நிலையங்கள் குறித்து கேட்டறிந்து, கலந்தாய்வு முறையில் 74 டேட்டா என்ட்ரி அலுவலா்களுக்கு பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கி மாவட்ட எஸ்.பி. ஆணை பிறப்பித்தாா்.

நிகழ்வின்போது, கூடுதல் எஸ்.பி.க்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி, டி.எஸ்.பி.க்கள் தமிழ்இனியன், பிரதீப், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ரவிச்சக்கரவா்த்தி, பாா்த்திபன், ரகுபதி, கந்தன், அப்பாண்டைராஜ், சரவணகுமாா் மற்றும் மாவட்ட காவல் அலுவலக நிா்வாக அலுவலா் வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.