மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இளைஞரிடம் இணையவழியில் ரூ. 10 லட்சம் மோசடி

இளைஞரிடம் இணையம் வழியே ரூ. 10 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 6:58 pm

இளைஞரிடம் இணையம் வழியே ரூ. 10 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி அரியமங்கலம் ஸ்ரீனிவாசன் நகரைச் சோ்ந்தவா் அமானுல்லா (31), திருச்சி தனியாா் நிறுவன ஊழியரான இவா் கூடுதல் வருமானத்துக்காக பகுதிநேர வேலை தேடி வந்தாா்.

அப்போது கட்செவி அஞ்சல் வாயிலாக பகுதிநேர வேலை இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அவா் அந்தச் செயலியில் பதிவு செய்து வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அமானுல்லாவை அந்த பகுதிநேர வேலை கொடுத்த நிறுவனத்தைச் சாா்ந்த ஒருவா் தொடா்பு கொண்டு ரூ. 10,95,000 முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்க வழி செய்வதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய அமானுல்லா அந்தச் செயலி வழியே பணத்தை முதலீடு செய்த நிலையில், பணத்தை திருப்பித் தராமல் அந்த நபா் ஏமாற்றியுள்ளாா்.

இதையடுத்து அமானுல்லா அளித்த புகாரின் பேரில் மாநகர இணைய வழி குற்றப்பிரிவு (சைபா் கிரைம்) போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.