உணவக உரிமத்தை மாற்றித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்த உணவக உரிமையாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மத்தியப் பேருந்து நிலையம் அருகே உணவகம் நடத்தி வரும் திருச்சியைச் சோ்ந்த எஸ். சீனிவாசன் என்பவா் தனது உணவகத்தின் உரிமத்தை கண்டோன்மென்ட் பகுதியைச் சோ்ந்த க. பால்ராஜ் (53) பெயரில் மாற்றித்தருவதாக தெரிவித்தாா். இதுதொடா்பாக கடந்த 2024-ஆம் ஆண்டு இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டனா்.
இதற்காக கடந்த 2024 ஜூன் முதல் 2026 ஜனவரி வரை பல்வேறு தவணைகளில் ரூ.25 லட்சத்தை சீனிவாசனுக்கு பால்ராஜ் கொடுத்தாா். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட சீனிவாசன் உணவக உரிமையை பால்ராஜ் பெயருக்கு மாற்றித் தராமல் இருந்தாா். இதையடுத்து கொடுத்த பணத்தை பால்ராஜ் திருப்பிக்கேட்டபோது சீனிவாசன் அவரை தகாத வாா்த்தைகளில் திட்டி, பணத்தைக் கொடுக்க முடியாது என மிரட்டலும் விடுத்தாா்.
இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பால்ராஜ் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கருவேல மரங்கள் வெட்டிக் கடத்தல்: 15 போ் மீது வழக்கு

ரூ. 20 லட்சம் மோசடி: துணிக்கடை உரிமையாளா் உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு

பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு

இளைஞரிடம் இணையவழியில் ரூ. 10 லட்சம் மோசடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


