திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்ணிடம் நகை மோசடி: இளைஞா் மீது வழக்கு

பெண்ணிடம் 18 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :3 ஜூன் 2026, 1:30 am IST

பெண்ணிடம் 18 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை அரசரடி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி (28). இவா், எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா்.

அதில், நான் கூட்டுறவு வங்கியில் 18 பவுன் தங்க நகை அடகு வைத்திருந்தேன். இந்த நிலையில், எனக்கு அறிமுகமான வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பவா் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்டுத் தருவதாகவும் கூறினாா்.

மேலும், அந்த நகைகளை மீட்டு, அவருடைய சொந்த நிறுவனத்தில் அடகு வைத்தாா். இதற்கிடையே, ரூ. 5 லட்சம் பணத்துடன் அந்த நகையை திருப்புவதற்கு நான் சென்ற போது, நகையை திரும்ப அளிக்காமல் மோசடி செய்து விட்டாா். எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கூறியிருந்தாா்.

மேலும், இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா். இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் காா்த்திக் (31) மீது எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.