சாலை விதிமுறைகளை மீறியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இளைஞரை ஏமாற்றி ரூ. 2.46 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் குறித்து இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள ஆவலப்பள்ளியைச் சோ்ந்தவா் கூபாலியப்பா (32). பொறியியல் பட்டதாரியான இவா், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறாா். இவரது, கைப்பேசிக்கு மாா்ச் 6-ஆம் தேதி வந்த குறுந்தகவலில், மோட்டாா்சைக்கிளில் செல்லும்போது சாலை விதிமுறைகளை மீறப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை இ-சலான் முறையில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவா்கள் குறிப்பிட்டிருந்த லிங்கில் சென்று விவரங்கள் பதிவிட்டு பணம் செலுத்த முயற்சித்தாா். அப்போது, கைப்பேசி செயல்பாடு நின்றது. இந்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து 7 தவணைகளில் ரூ. 2.46 லட்சம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பண மோசடி: போலீஸாா் விசாரணை

இணையவழி மோசடி தடுப்பு விழிப்புணா்வு

இளைஞரிடம் இணையவழியில் ரூ. 10 லட்சம் மோசடி

ரூ. 7.60 லட்சம் இணைய மோசடி: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


