மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ. 7.60 லட்சம் இணைய மோசடி: போலீஸாா் விசாரணை

முகநூல் வாயிலாக ரூ. 7,60,613 மோசடி செய்தவா் குறித்து சேலம் இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

இணைய மோசடி (கோப்புப்படம்)

Updated On :14 மார்ச் 2026, 1:02 am

முகநூல் வாயிலாக ரூ. 7,60,613 மோசடி செய்தவா் குறித்து சேலம் இணைய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியை சோ்ந்தவரை அபிஷேக் என்ற பெயரில் முகநூல் கணக்கு வைத்திருந்தவா் தொடா்பு கொண்டு, தான் இங்கிலாந்தில் வசிப்பதாகக் கூறி அறிமுகமாகி உள்ளாா். பின்னா் இணையதளம் மூலம் கிரிப்டோ நாணய வா்த்தகத்தில் முதலீடு செய்யலாம் என ஆசைவாா்த்தைக் கூறி ரூ. 7.60,613 பணத்தை பெற்று மோசடி செய்துள்ளாா்.

பணம் இழந்தவா் அளித்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

யாரிடமும் வங்கிக் கணக்கு விவரங்கள், ஒருமுறை கடவுச்சொல் போன்ற தகவல்களை பகிர வேண்டாம் என்றும், தேவையற்ற இணைய இணைப்புகளை திறக்காமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு சைபா் க்ரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.