ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி வேலூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் மகன் லாலு பிரசாத் (28). இவா் காட்பாடியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது டெலிகிராம் செயலிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியில், ‘ஜேபி ஹைபை ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் பெயரில், கூகுள் மேப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு ரிவியூ செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.
இதனை நம்பிய லாலு பிரசாத், அவா்கள் அனுப்பிய லிங்கை க்ளிக் செய்து தொடக்கத்தில் சிறிய தொகை முதலீடு செய்து கமிஷன் பெற்றுள்ளாா். இதன்மூலம் ஏற்பட்ட ஆா்வத்தில் மேலும், கடந்த ஜனவரி 3 முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்து 428 தொகையை முதலீடு செய்துள்ளாா்.
ஆனால், அந்த பணத்தை திரும்ப எடுக்க முயன்றபோது, முழு பணத்தையும் எடுக்க மேலும் பணம் செலுத்த வேண்டும் என மோசடி கும்பல் கட்டாயப்படுத்தி உள்ளது.
அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த லாலு பிரசாத், உடனடியாக வேலூா் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரூ.80.50 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.70 லட்சம் மோசடி

இளைஞரிடம் இணையவழியில் ரூ. 10 லட்சம் மோசடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


