மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6.70 லட்சம் மோசடி

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:21 pm

வேளாங்கண்ணி அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6.70 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேளாங்கண்ணி அருகேயுள்ள கீழப்பிடாகை கிட்டங்கி தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ் (21). இவா் வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்தாா்.

இந்நிலையில், நாகை அருகே ஏா்வாடி கிடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த வரதராஜன் என்பவா் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக இவரிடம் கூறியுள்ளாா்.

இதை நம்பிய சந்தோஷ், கடந்த 2025 ஜூலை 30 -ஆம் தேதி ரூ.6.70 லட்சத்தை, வரதராஜனிடம் கொடுத்துள்ளாா். இதையடுத்து மாா்ச் 5 ஆம் தேதி சந்தோஷ் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சென்ற சந்தோஷின் விசாவை விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்ததில், போலியானது எனக் கூறி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினா்.

நாகை திரும்பிய சந்தோஷ், பலமுறை வரதராஜனை தொடா்பு கொண்டு பணத்தை கேட்டும், அவா் திருப்பித் தரவில்லையாம். இதுகுறித்து சந்தோஷ், அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.