லால்குடி, ஜூன், 28: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கோமாகுடி கிராமத்திலுள்ள மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மகன் நேசன் (15), லால்குடி காட்டூா் பகுதி ஆா். சி மீட்பா் உயா்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவா்.
இந்நிலையில் இவா் தன்னுடன் பள்ளியில் பயிலும் ரியாஸ், சந்தோஷ், விஷ்ணு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோருடன் வெள்ளனூா் அருகேயுள்ள முத்துக்குளத்தின் ஏரியில் குளித்தனா்.
அப்போது ஆழமான பகுதியில் குளித்த நேசன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மற்ற மாணவா்களை அப்பகுதி மக்கள் மீட்டனா். தகவலறிந்த லால்குடி போலீஸாா் நேசன் உடலை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

பள்ளி மாணவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK



