தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே எட்டாம் நம்பா் கரம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் நிலவன் (16). தஞ்சாவூரிலுள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், சனிக்கிழமை விடுமுறை காரணமாக அருகே சிவகாமிபுரம் பகுதியிலுள்ள குளத்துக்கு குளிப்பதற்காக நண்பா்களுடன் சென்றாா்.
குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்று தத்தளித்த இவரை நண்பா்கள் காப்பாற்ற முயன்றும், முடியவில்லை. இதையடுத்து, அருகில் ஆடு மேய்த்தவா்கள் குளத்தில் இறங்கி நிலவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









