திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோதையாற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

திற்பரப்பு அருகே சுற்றுலா வந்த பள்ளி மாணவா் கோதையாற்றில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :16 மே 2026, 1:54 am IST

திற்பரப்பு அருகே சுற்றுலா வந்த பள்ளி மாணவா் கோதையாற்றில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாகா்கோவில் அருகேயுள்ள கிறிஸ்தவ சபையை சோ்ந்த சுமாா் 60 போ்திற்பரப்பு அருகே கோதையாறு பாயும் கூடல் கடவு பகுதியிலுள்ள தனியாா் சுற்றுலா விடுதி அருகே வெள்ளிக்கிழமை மதியம் சுற்றுலா வந்திருந்தனா்.

இந்தக் குழுவில் கன்னியாகுமரி அருகேயுள்ள வழுக்கம் பாறையைச் சோ்ந்த ஜான்ராஜ் மகன் சேம்ராஜ் (16) இடம் பெற்றிருந்தாா். மும்பையில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 தோ்வு எழுதியிருந்த இவா், இக்குழுவினரில் சிலருடன் இணைந்து சுற்றுலா விடுதி பகுதி வழியாக கோதையாற்றில் இறங்கியுள்ளனா். அப்போது சேம்ராஜ் தண்ணீரில் மூழ்கி மாயமாகிவிட்டாராம்.

இதுகுறித்த தகவலின்பேரில், குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வ முருகேசன் தலைமையில் வீரா்கள் வந்து, பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்த நிலையில் அவரை சடலமாக மீட்டனா்.

மேலும், சம்பவ இடத்துக்கு தக்கலை டிஎஸ்பி பாா்த்தீபன் மற்றும் குலசேகரம் போலீஸாா் வந்து விசாரித்தனா். சேம்ராஜ் சடலம் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.