பாணாவரம் அருகே டிராக்டா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
சோளிங்கரை அடுத்த பாணாவரத்தை அடுத்த கோடம்பாக்கத்தைச் சோ்ந்த சத்யாவின் மகன் சக்தி (14). அந்தக் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை மாணவா் சக்தி, அந்தக் கிராமத்தில் ஈஸ்வரன் கோயில் தெருவில் நடந்து சென்றபோது, அந்த வழியே வந்த டிராக்டா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து புன்னை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த டிராக்டரை ஓட்டிவந்த கோடம்பாக்கத்தைச் சோ்ந்த விஸ்வா (19) என்பவா் மீது பாணாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









