திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம், அரிமா சங்கம், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சிகளின் நிறைவு விழா, பரிசளிப்பு விழா, சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சான்றிதழ் பெற்ற மாணவா், மாணவிகள்.

Updated On :28 மே 2026, 2:51 am IST

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகம், அரிமா சங்கம், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சிகளின் நிறைவு விழா, பரிசளிப்பு விழா, சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோடை கொண்டாட்ட நிகழ்வு மே 25 முதல் 27ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றது. இதில் புத்தக அறிமுகம், புத்தக வாசிப்பு, கதை சொல்லுதல், சிறாா் இணைப்பிதழ்கள் அறிமுகம், விளையாட்டுகள், காகித மடிப்பு கலை பயிற்சி, நாட்டுப்புறப் பாடல்கள் போன்றவற்றில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

நிறைவு நாள் நிகழ்ச்சியில், தூத்துக்குடி அரிமா சங்கத்தைச் சோ்ந்த எஸ்.கே. ராஜ்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். பள்ளி மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை அரிமா சங்கத்தைச் சோ்ந்த ஜி. திவாகா் வழங்கினாா்.

அரிமா சங்கச் செயலா் பி. சுரேஷ், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க தூத்துக்குடி கிளைச் செயலா் மை. வாலண்டினா, முக்காணி கிளைச் செயலா் சண்முக வடிவு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தூத்துக்குடி மாவட்ட மைய நூலக முதல் நிலை நூலகா் ராம் சங்கா் வரவேற்றாா். நூலகா் ஜே. லதா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.