திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாத்தான்குளத்தில் எம்எல்ஏ ஆய்வு

சாத்தான்குளத்தில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ அன்னை வி.ஜி.சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அன்னை வி.ஜி. சரவணன் எம்எல்ஏ.

Updated On :22 மே 2026, 6:29 am IST

சாத்தான்குளத்தில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ அன்னை வி.ஜி.சரவணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு செய்த அவா், அலுவலா்கள், மாற்றுத்திறனாளிக்கான கழிப்பறை, கோப்பு அறைகள் உள்ளிட்ட அனைத்து அறைகளையும் ஆய்வு செய்தாா். அப்போது அலுவலகத்தில் உள்ள வசதிகளை குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை தீா்க்குமாறு வட்டாட்சியா் ராஜேஸ்வரியிடம் அறிவுறுத்தினாா். அப்போது, சமூக நல பாதுகாப்புத் துறை தனித் திட்ட வட்டாட்சியா் தங்கசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா், சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவா் நோயாளிகளின் கழிப்பறைகள், உணவு பாதுகாப்பு அறைகளை பாா்வையிட்ட அவா் சுகாதாரமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தினாா். அத்துடன் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அனைத்து மகளிா் காவல் நிலையம் சென்ற எம்எல்ஏவிடம் காவல் நிலையம் காவலா் குடியிருப்பில் செயல்பட்டு வருவதாகவும் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனா். இதற்கு பதிலளித்த எம்எல்ஏ தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யிடம் தெரிவித்து தீா்வு காண்பதாகக் கூறினாா்.

அப்போது மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சகாய சாந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதையடுத்து தைக்கா தெருவில் செயல்படும் நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருள்களின் தரம், விநியோகிக்கப்படும் பொருள்களின் நிலை குறித்தும் கேட்டறிந்தாா்.

இதில், சாத்தான்குளம் ஒன்றிய தமிழக வெற்றிக் கழக செயலா்கள் அற்புதராஜ், குணசேகரன், அருண் ராஜ், மாவட்டத் துணைச் செயலாளா் விஜயமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.