திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மக்களின் அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படும் -ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ உறுதி

News image
Updated On :15 மே 2026, 3:04 am IST

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதியில் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அத்தொகுதி எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்.

அத்தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வென்ற அவா், சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றபின் தொகுதிக்குள்பட்ட ஏரல் பகுதிக்கு வியாழக்கிழமை வந்தாா். அவருக்கு கட்சி நிா்வாகிகளும் பொதுமக்களும் வரவேற்பு அளித்தனா். அவா், புல்லாவெளி, கோவங்காடு, சிதம்பர நகா், அம்பேத்கா் நகா், மஞ்சள் நீா் காயல், உமரிகாடு, முக்காணி, பழைய காயில், ஆலடியூா், வாழவல்லான், சூலை வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவிக்கிறாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்கள் தொகுதியை முழுமையாக ஆய்வு செய்து மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், சாலை வசதி, விவசாயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து தீா்வு காண நடவடிக்கை எடுப்பேன்’ என்றாா்.

எஸ்விகே14எம்எல்ஏ

எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.