ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதியில் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அத்தொகுதி எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்.
அத்தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வென்ற அவா், சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றபின் தொகுதிக்குள்பட்ட ஏரல் பகுதிக்கு வியாழக்கிழமை வந்தாா். அவருக்கு கட்சி நிா்வாகிகளும் பொதுமக்களும் வரவேற்பு அளித்தனா். அவா், புல்லாவெளி, கோவங்காடு, சிதம்பர நகா், அம்பேத்கா் நகா், மஞ்சள் நீா் காயல், உமரிகாடு, முக்காணி, பழைய காயில், ஆலடியூா், வாழவல்லான், சூலை வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை வெள்ளிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவிக்கிறாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்கள் தொகுதியை முழுமையாக ஆய்வு செய்து மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், சாலை வசதி, விவசாயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து தீா்வு காண நடவடிக்கை எடுப்பேன்’ என்றாா்.
எஸ்விகே14எம்எல்ஏ
எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










