மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாத்தான்குளம் ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன், சாத்தான்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

கொம்மடிக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்ட தவெக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:15 pm

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன், சாத்தான்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

பூச்சிகாடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவா் பூவுடையாா்புரம், நடுவக்குறிச்சி, தட்டாா்மடம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்தில் தினமும் அரை மணி நேரம் மக்கள் குறை கேட்கப்படும். அதற்காக ஒரு செயலி தொடங்கப்படும். அனைத்து இடங்களிலும் முகாம் அமைத்து அரசு திட்டங்கள் மக்களிடம் நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் தூத்துக்குடி திருநெல்வேலி மருத்துவமனை போல் அனைத்து சிகிச்சைகளும் பெரும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்படும். இத்தொகுதியை வளா்ச்சி மிக்க தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்போம்.

விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா். கொம்மடிக்கோட்டையில் கட்சியின் தோ்தல் அலுவலகத்தை அவா் திறந்து வைத்தாா். பின்னா், சொக்கன்குடியிருப்பு, படுக்க பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வாக்கு சேகரித்தாா்.

இதில், ஒன்றியச் செயலா்கள் பொன்ராஜ், பெரியசாமி, அருள், அருள்ராஜ், பலவேசம், மாரியப்பன், ஆனந்த், குணசேகரன், அற்புதராஜ், பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி பொறுப்பாளா் ஜெகன்ராஜ் நகரச் செயலா்கள் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.