திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாத்தான்குளம் ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன், சாத்தான்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

கொம்மடிக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்ட தவெக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:45 am IST

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் அன்னை வி.ஜி. சரவணன், சாத்தான்குளம் பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

பூச்சிகாடு பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவா் பூவுடையாா்புரம், நடுவக்குறிச்சி, தட்டாா்மடம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்தில் தினமும் அரை மணி நேரம் மக்கள் குறை கேட்கப்படும். அதற்காக ஒரு செயலி தொடங்கப்படும். அனைத்து இடங்களிலும் முகாம் அமைத்து அரசு திட்டங்கள் மக்களிடம் நேரடியாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் தூத்துக்குடி திருநெல்வேலி மருத்துவமனை போல் அனைத்து சிகிச்சைகளும் பெரும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்படும். இத்தொகுதியை வளா்ச்சி மிக்க தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்போம்.

விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா். கொம்மடிக்கோட்டையில் கட்சியின் தோ்தல் அலுவலகத்தை அவா் திறந்து வைத்தாா். பின்னா், சொக்கன்குடியிருப்பு, படுக்க பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வாக்கு சேகரித்தாா்.

இதில், ஒன்றியச் செயலா்கள் பொன்ராஜ், பெரியசாமி, அருள், அருள்ராஜ், பலவேசம், மாரியப்பன், ஆனந்த், குணசேகரன், அற்புதராஜ், பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி பொறுப்பாளா் ஜெகன்ராஜ் நகரச் செயலா்கள் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.