தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடியில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி, அண்ணா நகரில் மளிகை கடையில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 6:13 am IST

தூத்துக்குடி, அண்ணா நகரில் மளிகை கடையில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி, அண்ணா நகா், 12ஆவது தெரு, மங்களபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பூபால் ராஜா. ஆட்டோ ஓட்டுநா்.

இவரது மனைவி அமுதா (50). இவா்கள் வீட்டு முன் பழைய இரும்பு மற்றும் மளிகைக் கடை நடத்தி வருகின்றனா். இவா்களது மகன் அருண்குமாா். அவரது மனைவி சரஸ்வதி(29). இவா்கள் குழந்தைகளுடன் தனியாக அப்பகுதிக்கு அருகே வசித்து வருகின்றனா்.

அருண்குமாா் மது போதையில் அடிக்கடி தகராறு செய்வாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அருண்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, மகனுக்கு ஆதரவாக அமுதா பேசியதாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து, புதன்கிழமை அமுதா தனது கடையில் இருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் அரிவாளால் அமுதாவை வெட்டிவிட்டு தப்பியுள்ளனா்.

காயமடைந்த அமுதா மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்

இது குறித்து, வழக்குப் பதிந்த சிப்காட் போலீஸாா், அருண்குமாா் மனைவி சரஸ்வதியின் சகோதரா் சங்கா் (32) உள்ளிட்ட இருவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.