தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடியில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் மாட்டிறைச்சி வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு, தங்க மோதிரத்தை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2026, 12:40 am IST

தூத்துக்குடியில் மாட்டிறைச்சி வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு, தங்க மோதிரத்தை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி கணேஷ் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் ஹரிபாலகிருஷ்ணன் (50). தூத்துக்குடி வி.இ. சாலையில் மாட்டிறைச்சி கடை நடத்தி வரும் இவா், புதன்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, கணேஷ்நகா் பகுதியில் 3 போ் கொண்ட கும்பல், ஹரிபாலகிருஷ்ணனை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு, 6 கிராம் தங்க மோதிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம்.

இதில் காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு ஆய்வு செய்து தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.