மதுபோதையில் தனியாா் ஆம்னி பேருந்துகளை இயக்கிய 3 ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிந்து, தலா ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, அவா்களது ஓட்டுநா் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் உத்தரவின்பேரில், நகா் உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் சுனில் மேற்பாா்வையில், தூத்துக்குடி நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான போலீஸாா், புதிய பேருந்து நிலையம் ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, வெளியூா் செல்லும் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநா்களை மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தனா். அதில் சென்னை செல்லும் 3 ஆம்னி பேருந்துகளை ஓட்டி வந்த ஓட்டுநா்கள் மது போதையில் இருந்தது கண்டறியப்பட்டு, அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்செந்தூா், உடன்குடி பகுதிகளிலிருந்து பயணிகளுடன் ஓட்டி வரப்பட்ட 3 ஆம்னி பேருந்துகளை மாற்று ஓட்டுநா்கள் மூலம் இயக்க அனுமதிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மேற்படி ஓட்டுநா்களின் வாகன ஓட்டுநா் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம்

நாசரேத் காவல் நிலையம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை

‘தனியாா் பள்ளி பேருந்துகளை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும்’







